சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து திரும்பிய சசிகலாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்லாருடைய எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்தை அளிக்கும் வண்ணம், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் சசிகலா அரசியலை விட்டு விலகி விட்டார் என்றும், அவர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவிலேயே எங்களை ஒதுக்கி விட்டார்கள். இதற்கு நிர்பந்தம் காரணம் என நான் சொல்ல மாட்டேன். இந்த முடிவு சசிகலாவின் சொந்த முடிவு. சசிகாலா அதிமுக-வின் பொது செயலாளர் தான். ஆனால், அவர் அதிமுகவை மீட்க போகிறார் என்று நானும் சொல்லவில்லை. சசிகலாவும் சொல்லவில்லை. சசிகலா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து இனிமேல்தான் ஆலோசனை நடத்த வேண்டும். சசிகலா அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சசிகலாவின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அவரிடம் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரைமணி நேரம் போராடினேன். ஆனால் அவரின் முடிவு எனக்கு சோர்வை அளித்தது. சசிகலா அவர் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே 'கட்சிக்கு யார் தலைவர்?' என்ற மோதல்…