சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – ஜூன் 27ம் தேக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை!

Published by
பாலா கலியமூர்த்தி

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்னும் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க பட வேண்டும் என சிபிஐ தரப்பில் தகவல்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சிபிஐ தரப்பில் இன்னும் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க பட வேண்டும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

அப்போது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இன்னும் 6 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என சிபிஐ தரப்பில் தகவல் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் கிளை ஆணையிட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் கால அவகாசத்தை நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

25 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

5 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago