சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ தங்களது விசாரணை அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பல அரசியல் பிரமுகர்களும், ரஜினி, கமல் உட்பட அனைத்து பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இந்த வழக்கு தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், தந்தை மற்றும் மகனை விடிய விடிய லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும், அதற்கான ரத்தக்கறைகள் லத்தி மற்றும் மேசையில் படிந்திருந்ததாகவும் பெண் காவலர் ரேவதி நேரடி வாக்குமூலம் அளித்ததாக வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது இந்த விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடமிருந்து சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவாளிகள் என கூறும் சாத்தான்குளம் ஆய்வாளரான ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 10 பேரை கொலை மற்றும் தடயங்கள் அழித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனின் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளனர்.
கொரோனா சூழல் காரணமாக வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நீதிபதிகள் சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…