வாக்களிக்க செல்ல இயலாதோர் கவனத்திற்கு… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் வாக்காளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு செயல்களிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையம் நேற்று புதிய அறிவிப்பை அறிவித்து இருந்தது. அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உடைக்க பலவீனமானவர்கள் இன்று உள்ளூர் பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள எதுவாக உள்ளூர் பேருந்தில் அவர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை பேருந்து வசதி அவர்கள் வசிக்கும் இடத்தில் இல்லை என்றாலும், வாக்குச்சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சக்ஷாம் (Saksham-ECI) எனும் செயலி மூலமும் அல்லது தேர்தல் ஆணையத்தின் 1950 எனும் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி எண் மூலமாகவோ இந்த வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த வசதியை மாற்று திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

6 minutes ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

29 minutes ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

2 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

2 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

3 hours ago

காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை! உதவி எண்கள் இதோ…

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…

4 hours ago