செந்தில் பாலாஜி வழக்கு – ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது

Published by
பாலா கலியமூர்த்தி

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றத்தை நாட அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணை நடைபெறுகிறது

அப்போது, செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான், அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் வைத்தார்.  கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை எனவும் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று நக்கீரன் கோபால் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் வைத்து வருகிறார். காரணத்தை கூறலாம் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15 ஏ பிரிவை அம்பேத்கர் சேர்த்திருக்கிறார்.

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடைக்கால உத்தரவாக கருத கூடாது என்றும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு எனவும் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அமலாக்கத்துறை தாணு மனு தாக்கல் செய்துள்ளது

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அதிமுகவின் போராட்டத்தால் அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…

17 minutes ago

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

2 hours ago

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

3 hours ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

4 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

4 hours ago