சென்னை மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம்.
சென்னை மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சுரேஷ் என்ற இளைஞர் அச்சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கத்தியதை பார்த்து பயந்துபோன அந்த கொடூரன் சிறுமியின் உடலை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.
இதையடுத்து வெளியே சென்ற சிறுமி வீட்டிற்குள் வராததால் அவரது பெற்றோர் சந்தேகமடைந்து அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிற்கு பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் சிறுமி கீழே விழுந்து ரத்தம் வடிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்த சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷை கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…