ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தங்கை – துரிதமாக காப்பாற்றிய 14 வயது சகோதரி!

Published by
Rebekal

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து துரிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியின் தலைமுடியை பிடித்து வைத்துள்ளார்.

அதன் பின்பாக சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அப்பகுதிக்கு வந்து சிறுமியை விரைந்து காப்பாற்றியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் ஆள்துளை கிணறு உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தங்கை விழுந்ததும் புத்திசாலித்தனமாக யோசித்து தனது தங்கையை காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

55 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago