எஸ் பிபி மறைவால் இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் வருத்தத்தில் உள்ளார்.இவர்களூக்குள் மனக்கசப்பு இருந்தபோதிலும் சரியாகி விடும்.இசையில் எவ்வித கசப்பும் இன்றி தேனிசையை கொடுத்தவர்கள்.
அந்தளவுக்கு சினிமாவையும் தாண்டி இவர்களது நட்பு மிக ஆழமானது நட்பு கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால அரை சதம் கண்டது.
எஸ் பிபி மறைவுக்கு ஏற்கனவே இரங்கல் வீடியோ வெளியிட்டு இருந்த இளையராஜா அதில் பாலு நீ போயிட்ட எங்க போன இங்கு உலகம் ஓரே சூனியமாக இருக்கிறது. எனக்கு இந்த உலகத்துல ஒன்றுமே தெரியல பேச வார்த்தை வரல என உருக்கமாக கூறியிருந்தார்.
இந்நிலையில் எஸ்பிபி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தானே இசை அனைத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலில் கானம் பாடிய வானம் பாடியே
உன் கீதம் இனறு ஏன் மவுனமானதோ?
உன் ராக ஆயுள் இன்று அமைதியானதோ..
அமைதியானதோ பாடி பாடியே அன்பை வளர்த்தாய்..
போற்றி போற்றியே தெய்வத்தை துதிப்பாய்..
இசை எனும் வானில் திசையை அளந்தாய்..
இன்னுயிர் யாவையுமே பாடியே தீர்த்தாய்
காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை
காற்று மண்டலத்தில் வசித்தாலும் கண்ணெதிரே
உனை காணும் வர கிடைக்குமா? மீண்டும் வரம் கிடைக்குமா?
அஞ்சலி..அஞ்சலி.. பாடும் நிலவிற்கு மவுன அஞ்சலி என்று அந்த வரிகள் இடம்பெற்றுள்ளன.அந்த குரல் என்னவோ எல்லோரையும் உண்மையில் உலுக்கி தான் விட்டு சென்றுள்ளது.
தினச்சுவடின் சார்பாக காந்தக்குரலுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது. உங்களோடு சேர்ந்து….!
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…