இன்று ஒருநாளாவது வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள் ..!

Published by
murugan

நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் செல்போன்கள் உள்ளிட்ட பிற சாதனங்களை ஒதுக்கிவைத்து விட்டு தங்களது குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு  கேட்டுக் கொண்டது.

இப்பொது உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் செல்ல பிள்ளைகளாக செல் போனிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவு செய்கிறார்.தங்களது குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் , தங்கள் குழந்தைகளுடன் சிறிது நேரத்தை கூட செலவு செய்வதில்லை.
அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனியே டியூசன் அனுப்புவதை தான் கௌரவம் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.எப்போது உள்ள எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தினமும் பள்ளி முடிந்து வந்த உடன் ஒரு அரைமணி நேரம் பள்ளியில் நடந்தை கேட்டு தெரிந்து கொள்கிறீர்கள்..?
Image result for குழந்தை டியூசன்
இப்பொது உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பள்ளி முடிந்து வந்த உடன் சாப்பிடவைத்து உடனே டியூசனுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.குழந்தைகள் எந்த மன நிலையில் உள்ளார்கள் என்பதை பெற்றோர்கள் கேட்டு தெரிந்து கொள்வது கிடையாது.
பள்ளி முடித்ததும் வரும் அனைத்து குழந்தைகளும் சோர்வாக வருவார்கள் அவர்களுக்கு ஜீஸ் , காபி அல்லது உடலுக்கு வலிமை தரக்கூடிய பயிறு வகைகள் கொடுத்து சாப்பிட வைத்து அன்று பள்ளியில் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளியில் காலை செல்லும் போது குழந்தையின் முகம் எப்படி இருக்கிறது.பள்ளி முடிந்து வரும்போது குழந்தையின் முகம் எப்படி இருகிறது என பெற்றோர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். குழந்தையின் முகம் சந்தோஷசமாக இருந்தாலும் ,சரி  சோகமாக இருந்தாலும் சரி அவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

வேலைக்குச்செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதும் இல்லை. இதனால் குழந்தைகள் தனிமையாக வளர்கிறார்கள். வேலைக்குச்செல்லும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நலனுக்கான தான் வேலைக்கு செல்கிறார்கள்.
ஆனால் அதுவே சில நேரங்களில் குழந்தைகளுக்கு மனவேதனையை ஏற்படுத்துகிறது. என்னதான் வேலைகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தினமும் ஒரு அரைமணி நேரம் அவர்களுடன் வெளியில் நடைபயணமாக சென்று மனம் விட்டு பேச வேண்டும்.அப்படி இல்லையென்றாலும் வீட்டில் குழந்தைகளின் பக்கத்தில் அமர்ந்து மனம் விட்டு ஒரு நண்பராக பேச வேண்டும்.

அதுவும் இல்லையென்றாலும் மொபைல் போனில் விளையாட பல மணி நேரம் ஒதுக்கும் நமக்கு நாம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி தினமும் அரைமணி நேரமாவது விளையாடுங்கள்.இதனைக் கருத்தில் கொண்டுதான் இன்று  மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தாமல்  குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
 

Published by
murugan

Recent Posts

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

6 minutes ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

7 minutes ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

24 minutes ago

”எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியிருக்க வேண்டும்” – அதிபர் டிரம்ப் புலம்பல்.!

வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…

1 hour ago

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…

1 hour ago

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…

2 hours ago