தமிழ்நாடு

விளையாட்டுத் துறை ‘ஸ்டார்’ துறையாக வளர்ந்து வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில் 28% தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளோம். விளையாட்டுத் துறையின் அமைச்சர் ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ‘ஸ்டார்’ துறையாக வளர்ந்து வருகிறது.

விளையாட்டுத்துறையில் கேப்டனாக இருந்து அமைச்சர் உதயநிதி அவர்கள், அனைத்து விளையாட்டு வீரர்களையும் சாம்பியனாக உருவாக்கி வருகிறார். சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது.

விளையாட்டு என்பது உடல் வலிமையையும், உள்ள வலிமையையும் மேம்படுத்தக் கூடியது. படிக்கும் காலத்தில் ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் பங்கேற்கும் வகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிய போட்டிகளில் 5-வது இடத்தில உள்ள தமிழ்நாடு, முதல் இடத்திற்கு முன்னேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும்,  ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசு வழங்கினார். தமிழக வீரர், வீராங்கனைகள் 20 பேருக்கு, ரூ.9.4 கோடி ரொக்க பரிசு வழங்கினார்.

Published by
லீனா

Recent Posts

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

53 minutes ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

60 minutes ago

ராமராக ரன்பீர்.., ராவணனாக யாஷ்.!! மிரள வைக்கும் ‘ராமாயணம்’ ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.!

சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…

1 hour ago

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

2 hours ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

2 hours ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago