தூத்துக்குடியில் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று இருந்த ஸ்டாலின் அவர்களின் மனைவியிடம் மூதாட்டி ஒருவர் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா என கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கோவிலுக்கு வருவார் எனவும் துர்கா ஸ்டாலின் பதிலளித்து சென்றுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் களக்காடு பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உடன் சென்று இருந்தவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். பின் அங்குள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கும் அவர் சென்றுள்ளார். தூத்துக்குடிக்கு வரும்போதெல்லாம் ஸ்டாலின் அடிக்கடி இந்த பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கமாம். அப்பொழுது அங்கு தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து கொண்டிருந்த 85 வயது மூதாட்டியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் நலம் விசாரித்துள்ளார்.
அப்பொழுது அவர் நீங்கள் யார் என கேட்டதற்கு அருகிலிருந்தவர்கள் இவர்கள்தான் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி எனக் கூறியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி உங்கள் வீட்டிலுள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா? பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் பெருமாள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை உள்ளது எனவும். அவர் கோவில்களுக்கு எல்லாம் வருவார் எனவும் பதிலளித்துள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…