சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக அன்பு நியமனம்..!

Published by
murugan

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.

சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணி நீட்டிப்பு செய்வதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக  நியமித்தது செல்லும் என்றும் அதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உண்டு எனவும் கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.

இதையடுத்து தமிழக அரசு மேலும் ஒரு புதிய மனுவை இரண்டு வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அதில் உச்சநீதிமன்றத்தில் சிலை தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசுக்கு எதிராக பொன்மானிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.

அதனால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் மேலும் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் , தொழில்சார்ந்த அதிகாரிடம் கொடுக்க வேண்டுமெனவும் கூறியிருந்தது. அந்த வழக்கை டிசம்பர் 2-ம் தேதி  ஒத்தி வைத்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட  வழக்கறிஞர்  , பொன் மாணிக்கவேல் பதவி காலம் கடந்த மாதம் 30-ம் தேதியோடு முடிவடைந்து விட்டது .ஆவணங்களை கேட்டால் எங்களுக்கு  எதிராகவே அவமதிப்பு வழக்கு தொடர்கிறார். எனவே இனியும் பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக தொடரக் கூடாது நாங்க வேற அதிகாரியை நியமித்து கொள்கிறோம் என கூறினார்.

இதற்கு பொன்மானிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பொன்மானிக்கவேல் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மற்றும் விசாரணை அறிக்கை ஆகியவற்றை துறை உயர் அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு எதிராக பொன்மணிக்கவேல் தொடரப்பட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு உத்தரவுகள்  நாங்கள் பிறப்பிக்க முடியாது அதனை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம்  பொன்மானிக்கவேல் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு அனைத்து எதிர்மனு தாரர்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில்  புதிய ஐ.ஜியாக காவல் துறையின் நிர்வாக ஐ.ஜியாக அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொன்மானிக்கவேல் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து அதிகாரிகளும் ஐ.ஜி அன்பு கீழ்  செயல்பட உள்ளன.

Published by
murugan
Tags: anbuIG

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

4 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

5 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

5 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

5 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

6 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

6 hours ago