ஆன்லைன் வணிக உணவு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

Published by
கெளதம்

தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை.

தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் கூறுகையில், சென்னை போன்ற பெருமாநகரங்களில் தொலைபேசி மற்றும் இணையவழி வணிகம் மூலம் உணவு வேண்டுவோரின் இடங்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கும் முறைமை தற்காலத்தில் பெருகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மக்களிடம் எளிதில் தொடர்பு வலைபின்னல் ஏற்படுத்துவதன் மூலம் இவ்வகைத் தொழிலில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. தொடர்புடைய நிறுவனங்கள் உணவு வழங்கல் பணிக்காக இருசக்கர வாகனமுடைய இளைஞர்களைப் பெருமளவு பணிக்கு அமர்த்துகின்றன.

ஒவ்வொரு உணவு வழங்கலுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை என்ற அடிப்படையில் ஊதியம் மற்றும் தொலைவு மற்றும் விரைவு போன்ற காரணங்களுக்காக ஊக்கத்தொகையையும் வழங்கி தொழிலை மேம்படுத்திய இந்நிறுவனங்கள் மக்களிடம் சென்றடைந்து நல்ல வரவேற்பையும் வருமானத்தையும் பெறத் தொடங்கிவிட்ட பிறகு அதற்காகப் பாடுபட்ட ஊழியர்களின் பணிகளில் அதிகக் கெடுபிடிகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தொடங்கிவிடுகின்றன.

அந்த வகையில் சென்னையில் இணையவழி வணிகம் மூலம் உணவு வழங்கும் தனியார் நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) தொடக்கத்தில் தனது ஊழியர்களுக்கு நேர்மையான முறையில் ஊதியத்தையும், ஊக்கத்தொகையையும் அளித்து வந்தது. ஆனால் தற்போது குறைந்தளவு தொலைவில் உள்ள இடங்களுக்கு உணவு கொண்டு வழங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை 40 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகக் குறைத்துள்ளது. இது தவிர நீண்ட தொலைவுக்குச் சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகையும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது.

நாளொன்றுக்கு ஒரு ஊழியர் அதிகப்பட்சமாக 25 முறை உணவு வழங்கும் வாய்ப்புகளையும், ஒரு உணவு வழங்கலுக்கு 40 ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் நாளொன்றுக்கு ரூ.1,000 வரை வருமானமாகக் கிடைத்தது. கூடுதலாகக் கிடைக்கும் ஊக்கத்தொகை அவர்களுடைய உணவு மற்றும் எரிபொருள் தேவையை நிறைவேற்றிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது.

தற்போது ஒருமுறை உணவு வழங்க ரூ.15 எனவும் அதிகப்பட்சம் 20 முறை மட்டுமே வாய்ப்பும் வழங்கப்படுவதால் நாளொன்றுக்கு ரூ.300 வரை மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. இணையவழி உணவு வழங்கல் நிறுவனங்கள் உணவகங்களின் உண்மையான விற்பனை விலையை விட 30% வரை கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் உணவு வழங்கல் கட்டணமாகத் தொலைவைப் பொறுத்து ரூ.100 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் நிறுவனங்கள் உணவு வழங்கல் ஊழியர்களுக்கு ஊதியத்தை மிகுதியாகக் குறைத்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஏற்கனவே ஊரடங்கு காரணமாகப் பல்வேறு தொழில்களும் நலிவடைந்த நிலையில் உணவு வழங்கல் வாய்ப்புகள் குறைவாகக் கிடைக்கும் சூழல் நிலவுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றுப் பரவிவரும் சூழலிலும் உயிரை பணயம் வைத்துக் களத்தில் பணியாற்றிப் பசி தீர்க்கும் அரும்பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி அவர்களை வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளுவது சிறிதும் மனிதநேயமற்ற செயலாகும்.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண தொடர்புடைய நிறுவனம் முன்வரவில்லை என்றும் இதுதொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி ஊழியர்களின் ஊதியத்தைப் பாதிக்கும் மேலாகக் குறைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வறுமையில் வாடவிடும் இதுபோன்ற தனியார் பெரு நிறுவனங்கள் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் உடனடியாகத் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகைச் செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதுபோன்று இணையவழி உணவு வழங்கலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்கள் இனிமேல் பாதிக்கப்படா வண்ணம் இணையவழி வணிக உணவு வழங்கலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உடனடியாக வகுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

46 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

1 hour ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

3 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

3 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

4 hours ago