கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.அவர் உரையை வாசித்து முடித்ததும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரை 4 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில், முதலாவதாக கூட்டம் தொடங்கியதும், மரபு படி சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும். இந்த நிதிநிலை அறிக்கையில்,
என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய கவர்ச்சிகரமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், அதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு கடன் தொகை அதிகரிப்பு தான் என்றும் எதிர்கட்சிகளால் குற்றம் சாற்றப்படுகிறது. மேலும், இன்றைய கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல விவகாரங்களை எதிர்கட்சிகள் கையில் எடுப்பார்கள் என்று தெரிகிறது.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…