மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்!

Published by
Rebekal

மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணையால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனும் அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். இருப்பினும், சட்டம் தங்களுக்கு சாதமாக இருப்பதால் எதிர்ப்புகள் வந்தாலும் மேகதாதுவில் அணை காட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

24 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

31 minutes ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

1 hour ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

1 hour ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago