Annamalai IPS [Image- FB/@Annamalai]
அரசின் அலட்சியத்தால் தமிழகப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம்.
பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துவிட்டதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள்.
புதுச்சேரி சார்பில் மாணவர்கள் பங்கேற்கின்றனர், ஆனால் தமிழகம் சார்பில் அணி தேர்வு செய்யப்படாததற்கு பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு தான் காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.
விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பு நம் மாணவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.<
/p>
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…