தமிழக அரசின் மெத்தனம்- அண்ணாமலை விமர்சனம்.!

Published by
Muthu Kumar

அரசின் அலட்சியத்தால் தமிழகப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம்.

பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துவிட்டதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள்.

புதுச்சேரி சார்பில் மாணவர்கள் பங்கேற்கின்றனர், ஆனால் தமிழகம் சார்பில் அணி தேர்வு செய்யப்படாததற்கு பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு தான் காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.

விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பு நம் மாணவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.<


/p>

Published by
Muthu Kumar

Recent Posts

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

8 minutes ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

3 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

3 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

4 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

5 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

5 hours ago