முதல்வர் நல்ல மனிதர்.! திராவிட மாடல் காலாவதியான ஐடியா.! ஆளுநர் ரவி பரபரப்பு பேட்டி.!

Published by
மணிகண்டன்

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியான ஐடியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம் செய்துள்ளார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி, தனியார் செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டி தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேச தொடங்கப்பட்டுள்ளது. அவர் அளித்த பேட்டியில் திராவிட மாடல் என்பது காலாவதியான ஐடியா என குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

திராவிட மாடல் எனும் காலாவதியான ஐடியா , இந்தியாவின் ஒரே நாடு ஒரே கொள்கைக்கு எதிரானது என ஆளுநர் ரவி பேசியுள்ளார். அடுத்து அண்மையில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , ஆளுநர் மாளிகை செலவீனங்கள் குறித்து பேசிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

அடுத்து, சித்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா குறிப்பிட்ட ஆளுநர், அந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை முதல்வர் நியமிப்பது போல மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஆளுநர்கள் தான் நியமிக்க வேண்டும். அப்போது தான் அதில் அரசியல் இருக்காது.

துணை வேந்தர்களை முதல்வர் நியமித்தால் அரசியல் புகுந்துவிடும். கல்வியில் அரசியல் புகுந்ததால் தான், 1950-60களில் இருந்த தமிழக கல்வி நிலை தற்போது இல்லை பின்தங்கியுள்ளது எனவும் தனது விமர்சனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி முன் வைத்தார். தற்போது பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் (கல்லூரி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்) தலைமை செயலகத்தில் நடக்கிறது எனவும் ஆளுநர் குற்றம் சாட்டினார்.

அடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மோதல் எதுவும் கிடையாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. முதல்வர் நல்ல மனிதர். நான் முதல்வரும் நல்ல நட்புடன் தான் இருக்கிறேன் எனவும் அந்த பேட்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

300 ரன்களுக்கு இங்கிலாந்தை அவுட் ஆக்குங்க…மேட்ச் உங்களோடது! இந்தியாவுக்கு அட்வைஸ் சொன்ன கும்ப்ளே!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…

18 minutes ago

குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…

1 hour ago

எல்.எல்.பி. சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…

2 hours ago

தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு…உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச…

3 hours ago

சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?

வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக…

3 hours ago