விரைவில் புயல்… தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக மழை தற்போது வரையில் தமிழகத்தில் பெய்து வந்த நிலையில், தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மேலும், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒட்டிய கிழக்கு அந்தமான் பகுதிகளில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, புதிய புயலாக மாறும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி , காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அடுத்து ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் அடுத்த இரண்டு தினங்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்,

டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழையும், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

இன்று அந்தமான் பகுதியில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும், 1,2 தேதிகளில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் கடலில் காற்று வீசக்கூடும் என்பதாலும் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையோடு , இந்த ஆண்டு பருவமழையை ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைவாகவே மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த வருடம் 35 சென்டிமீட்டர் பெய்து இருந்த மழையானது, இந்த வருடம் 32 செண்டிமீட்டராக மாறி உள்ளது என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

1 minute ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

9 hours ago

கேரள கன்னியாஸ்திரிகள் மீது ஆள்கடத்தல், கட்டாய மதமாற்ற வழக்குப்பதிவு – மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…

10 hours ago

நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!

பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…

11 hours ago

நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…

11 hours ago

“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…

12 hours ago