[Image Source : Twitter/@TNDIPRNEWS]
சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாறு தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்பின் பேசிய முதலமைச்சர், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது.
எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. ஜப்பான் நிறுவன முதலீடுகளுக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாக விளங்குகிறது. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாறு தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். 2 ஆண்டில் ரூ.5,596 கோடி முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 5 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு மேலும் பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜப்பான் நாட்டில் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகளவில் பெறும் நாடு இந்தியா தான். மேலும், மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் எனவும் ஒசாகா முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றினார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…