சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து தமிழகம் மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்ததை ஒட்டி வழங்கப்படும் விருதினை அனைவருக்கும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் சிறந்த மாநிலங்களின் பட்டியலை, இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், அகில இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் சிறப்பான முறையில் செயல்படுவதாக என இந்தியா டுடே கூறியுள்ளது.
மேலும் இந்தியா டுடே சார்பில், டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு இந்தியா டுடே சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தை முதல் இடமாக தேர்ந்தெடுத்த இந்தியா டுடே இதழுக்கு தமிழக அரசு சார்பில் நன்றியை தெரிவித்த முதல்வர்,அரசு அதிகாரிகள், பணியாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பாலும், தமிழக மக்களின் ஒத்துழைப்பாலுமே “தொடர்ந்து 3-வது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு” தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.இவ்விருதினை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…