Annamalai BJP EB [Image-FB/@annamalai]
தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் என அண்ணாமலை பேட்டி.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும், அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, இந்தியாவில் காமராஜரைப் போன்று ஒரு முதலமைச்சர் இல்லை. தமிழகத்தில் விவசாய மாநிலமாக மாற்றியதில் காமராஜரின் பெரும் பங்கு உள்ளது. 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் தொழில், அரசியல் உள்ளிட்ட 360 டிகிரி முதலமைச்சர் என்றார்.
இதுபோன்று காமராஜர் வரலாறு குறித்து பேசிய அண்ணாமலை, இந்த நன்நாளில் தமிழக அரசியலில் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என பாஜகவினர் சபதம் எடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிருக்க வேண்டும். மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது என விமர்சித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…