VCK MP Thirumavalavan - Indian Parliment [File Image]
நமது நாடு சுதந்திரம் பெற்றது முதல் இந்திய பாராளுமன்றமாக டெல்லியில் செயல்பட்டு வந்த ஆங்கிலேயர் காலத்து கட்டடத்திற்கு நேற்று முன்தினம் நாடளுமன்ற உறுப்பினர்கள் பிரியா விடை கொடுத்தனர். தற்போது டெல்லியில் மத்திய அரசால் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தில் அலுவல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முதல் நாள் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது. முதல் நாள் முதல் அலுவலாக நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இன்று இரண்டாவது நாளாக அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
பழைய நாடாளுமன்றத்திற்கு கடந்த திங்கள் கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியாக உரையாற்றினார்கள். அதில் இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.
இறுதியாக அவர் பேசுகையில், தமிழில் உரையாற்றினார். அதன் பிறகு பழைய நாடாளுமன்ற அலுவல்கள் முடிந்ததாக சபாநாயகர் அறிவித்து விட்டார். இதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடத்தில் கடைசியாக ஒலித்த குரல் தமிழ் என்பதும், அதனை பேசியவர் திருமாவளவன் என்பதும் பதிவாகியுள்ளது.
ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…
மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…
சென்னை : கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…
சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…
சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…