தமிழ்நாட்டு மீனவர்கள் படகுக்கு ரூ.2 கோடி அபராதம்! – மாலத்தீவு அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

மாலத்தீவு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், கடந்த 23ம் தேதி தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

12 பேரையும் மீட்க மத்திய – மாநில அரசுகள் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்களும், விசைப்படகு உரிமையாளா் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து,  உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று மத்திய அமைச்சருக்கு கடிதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!

இதனைத்தொடர்ந்து, மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த மைக்கேல்ராஜ், மகேஷ்குமாா் பரமசிவம், ஆதிநாராயணன், திரவியம், அந்தோணி செல்வசேகரன், பிரான்சிஸ், அந்தோணி, சிலுவைப்பட்டி அன்புசூசை மிக்கேல், ராமநாதபுரம் மணி, ராமேஸ்வரம் உதயகுமாா், விக்னேஷ், மதுரை மாதேஷ்குமாா் துரைப்பாண்டி ஆகிய 12 பேரும் கடந்த 30ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுக்கு ரூ.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு நீதிமன்றம் அண்மையில் விடுவித்த நிலையில், அவர்களின் படகுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  ரூ.2 கோடி அபராதம் செலுத்தினால் மட்டுமே படகை விடுவிக்க முடியும் என மாலத்தீவு அரசு நிபந்தனை விதித்துள்ளது. மாலத்தீவு அரசின் நிபந்தனையால் ஊர் திரும்ப முடியாமல் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்கள் 12 பேர் தவித்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

1 hour ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

2 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

2 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

3 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

4 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago