நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தமிழக அரசின் தொலைக்காட்சியில் நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும். இதில் குறிப்பாக நீட் தேர்வு எழுத்தவுள்ள மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
ஆன்லைன் மூலம் பல மாணவர்கள் பயிற்சி பெற்றாலும், ஏழை எளிய மாணவர்கள் இதையே பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீட் தேர்வின் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கு வல்லுநர்களை கொண்டு எடுக்கப்படும் வகுப்பு தினமும் 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி, ‘நீட்’ தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…