நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தமிழக அரசின் தொலைக்காட்சியில் நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால் மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியிருக்கும். இதில் குறிப்பாக நீட் தேர்வு எழுத்தவுள்ள மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.
ஆன்லைன் மூலம் பல மாணவர்கள் பயிற்சி பெற்றாலும், ஏழை எளிய மாணவர்கள் இதையே பெற முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நீட் தேர்வின் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கு வல்லுநர்களை கொண்டு எடுக்கப்படும் வகுப்பு தினமும் 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி, ‘நீட்’ தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…