3 கோடி நிதியுதவி அளித்த அமெரிக்க வாழ் தமிழர்கள் – முதல்வர் முக ஸ்டாலின் நன்றி!

Published by
Rebekal

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்காக அமெரிக்கா வாழ் தமிழர்கள் தற்பொழுது 3 கோடி நிதியுதவி அளித்துள்ளதால், தமிழ் போல் வாழ்க என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து திரை உலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் வாழக்கூடிய தமிழ் மக்கள் இணைந்து கொரோனா பணிகளுக்காக தற்பொழுது முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி நிதியாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே இவர்கள் 20 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காணொலி வாயிலாக முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் இது குறித்து பேசியுள்ளார்.

அதில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் உரிமையை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ளதாகவும், அமெரிக்காவில் இருந்து சில நண்பர்கள் தமிழகத்திற்கு வந்து திமுகவிற்காக  தேர்தல் பரப்புரை செய்ததையும் தான் அறிவேன் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே அமெரிக்க வாழ் தமிழர்கள் 20 கோடி மதிப்பில் நிவாரண உதவி செய்ததாகவும், தற்பொழுதும் சுமார் 3 கோடி ரூபாய் நிதியை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் வழங்கிய உள்ளதாகவும், இதில் பல லட்சம் குடும்பங்களின் வாழ்வு தெரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்கள் நிதி மக்களை வாழவைக்கும் எனவும், கொரோனாவை குணப்படுத்துவது மருந்து மட்டுமல்ல பிறர் கொடுக்கும் ஆறுதலும் தான். அத்தகைய நம்பிக்கை விதையை நீங்கள் விதைத்து உள்ளீர்கள். காலத்தால் செய்த நன்றி என்று வள்ளுவர் சொல்வது போல நீங்கள் நன்றியை காட்டி இருக்கிறீர்கள். உங்கள் நிதி பலகோடி மக்களை வாழவைக்கும், உங்கள் நிதி உயிர் கொடுக்கும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் தமிழ்நாட்டு மக்களை மறக்க மாட்டீர்கள் என்று காட்டி இருப்பதாகவும், நாங்களும் உங்களை மறக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த தமிழ்குடி மக்கள், புலம்பெயர்ந்து சென்று இருந்தாலும் நாம் இணைப்பதும் பிழைப்பதும் தாய் மொழியாம் தமிழ் மொழி தான் எனவும், அந்த தமிழ்மொழி போல நீங்கள் பல்லாண்டு வாழ்க என உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், நன்றி வணக்கம் என உரையாற்றியுள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

49 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago