சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட அதிவேக தேஜஸ் ரயிலை பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடக்கி வைத்தார்.
இந்த அதிவேக தேஜஸ் ரயில் 13 பெட்டிகள் கொண்டது.அதில் 57 பேர் பயணம் செய்யும் உயர்தர குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டியும், 78 பேர் பயணம் செய்யும் 12 குளிர்சாதனப் பெட்டிகளும் உள்ளது.இந்த பெட்டிகளில் இருக்கையில் பின் புறம் டிவி உள்ளது.மேலும் மொபைல் சார்ஜர் செய்யும் வசதியும் உள்ளது.
வாரத்தில் வியாழன் கிழமை தவிர மற்ற நாட்களில் மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு சென்றடையும் .சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.30 மணிக்கு வந்தடையும்.
இந்நிலையில் இந்த ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது.மேலும் கூடுதல் வருவாய் கிடப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.தேஜஸ் ரயில் மார்ச் 2 முதல் ஜூன் 27-ம் தேதி வரை அதாவது கடந்த மூன்று மாதங்களாக 10 லட்சத்து 21ஆயிரத்து 76 பேர் பயணித்ததன் மூலம் ரூ.17.8 கோடி வருவாய் கிடைத்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…