திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.! என்னென்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள் நிறேவேற்றப்பட்டுள்ளன.

சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின், தொண்டர்கள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். 2026 பொதுத் தேர்தலுக்கு எழுச்சியூட்டும் பொதுக்குழுவாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை..,
- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
- மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.
- இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்குப் பாராட்டு.’
- உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்.
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.
- ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர் உதயஸ்டாலின் பணி தொடரத் துணை நிற்போம்.
- ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்.
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக.
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
- ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
- சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக.
- ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்.
- மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கடும் கண்டனம.
- மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக.
- சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக.
- தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
- ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு.
- குடியரசுத் துணைத் தலைவரின் விமர்சனத்திற்குக் கண்டனம்.
- அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
- உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக.
- மலரட்டும் மாநில சுயாட்சி.
- பேரிடர் மீட்புப் பணியில் கழக அரசுடன் கழகத்தினரும் துணை நிற்போம்.
- எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்.
- அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு.
- வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்.
சிறப்பு தீர்மானம்
நமது மண், மொழி, மானம், மாநில உரிமைகளை காத்திட தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஓர் குடையின்கீழ் திரண்டு, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிட்டு பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை வாசித்த முதலமைச்சர் ஸ்டாலின், ”தமிழ்நாட்டின் மண், மொழி, மானம், நலனையும் உரிமைகளையும் காத்திட “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம். துளியும் சமரசமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளை காத்திடும் பொருட்டு. ‘ஓரணியில் தமிழ்நாடு’ என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது” என்றார்.