சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மதுரை மாநகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரி குறைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், ”சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு […]
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, மற்றும் இந்த மண்டலங்களின் தலைவர்களாக வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் பதவி வகித்து வந்தனர். […]
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக […]
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியதாகக் கூறப்படும் நித்யானந்தா, “கைலாசா” என்ற பெயரில் ஒரு தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். இந்த “கைலாசா” நாடு எங்கு உள்ளது, அதன் சட்டபூர்வ நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை இல்லை, […]
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 3டி வீடியோ வெளியீட்டை கடுமையாக விமர்சித்தார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக “கற்பனைக் காட்சிகளை” (3D வீடியோ) மட்டும் வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம்சாட்டினார். இந்த வீடியோவைக் […]
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டம் 2018இல் முறையாக ஒப்புதல் பெற்று, 2019 ஜனவரி 27 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இது மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்றது, இதில் அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த மருத்துவமனை […]
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன் 3ம் தேதி இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. அதாவது, சாலை அமைப்பது உள்ளிட்ட வசதிகளை செய்யும் வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், இந்த இரண்டு சுங்க சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து அடுத்த இரு தினங்களிலேயே உச்ச […]
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை […]
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் நட்புறவு பாராட்டவும், இணக்கமாக செயல்படவும், 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கவும் பாஜகவினருக்கு உத்தரவிட்டார். “நம்பிக்கையோடு பணியாற்றுங்கள், வரும் காலம் நமதே” என்று உறுதியாகக் கூறிய அவர், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழ் மொழியில் பேச […]
சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே மதுரை சென்ற முதல்வர், விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம், திருமலை நாயக்கர் சிலை வழியாக ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷா நடத்தினார். இந்நிலையில், முதல்வர் வருகையை முன்னிட்டு, பந்தல்குடியில் 2 கி.மீ-க்கு தூர்வாரப்படாத கால்வாயை ஜமுக்காளம் போட்டு மறைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் இரவு நேரத்தில் அந்த […]
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி சென்றிருந்தார். அப்போது, நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “2026 தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் ” என்று தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,” விசிக சார்பில் “மதச்சார்பின்மை காப்போம்” பேரணி திருச்சியில் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பு சனநாயக சக்திகளும் இதில் பங்கேற்று […]
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக, பாஜக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க […]
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தற்போது கூட்டத்தில் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், […]
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின், தொண்டர்கள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். 2026 பொதுத் தேர்தலுக்கு எழுச்சியூட்டும் பொதுக்குழுவாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை.., முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை […]
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் திமுக தெற்கில் இருந்து தொடங்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமாக பொதுக்குழு ஒன்றை நடத்துகிறது. எனவே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பு இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் எனவும், மதுரை பெருங்குடி […]
மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பந்தல்குடி சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில், சாலையில் உள்ள சாக்கடை கழிவுகள் கலக்கும் […]
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நாளை 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1,244 இடங்களில் கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் […]
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் (பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவை) காலியாக உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், இந்த இடைத்தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த […]
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து, விண்ணை முட்டும் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இந்த கூட்டத்தில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் பக்தர் ஒருவர் மயங்கி விழந்து உயிரிழந்தார். நெல்லையை சேர்ந்த அவர் (பூமிநாதன்) […]