தென்காசி சட்டமன்ற தொகுதி – மீண்டும் தபால் வாக்கு எண்ணிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. தென்காசி எம்எல்ஏ பழனி வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், 10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த ஆணையிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தென்காசி தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று மீண்டும் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

2021-ஆம் ஆண்டு தேர்தலில் 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு 1,609 தபால் வாக்குகள், அதிமுகவுக்கு 674 தபால் வாக்குகள் கிடைத்தது. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் தென்காசி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

30 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

30 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

19 hours ago