காஞ்சிபுரம் பகுதியில் 10 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! பொதுமக்கள் அதிர்ச்சி!

Published by
மணிகண்டன்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குண்டுகள் பாதி வெடித்தும் பாதி வெடிக்காமலும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து விசாரிக்கையில், குறிப்பிட்ட அனுமந்தபுரம் ஏரிப்பகுதி பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாகும் இங்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல பயிற்சி நடைபெறும். அந்த பயிற்சி நடைபெற்று முடிந்த பின்னர், இது மாதிரியான வெடிகுண்டுகள் வெடிக்கும் நிலையிலும்,  வெடிக்காமலும் சிதறிக்கிடக்கும் இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் எடுத்து அருகில் உள்ள இரும்பு கடையில் கொடுத்து காசாக்கி விடுகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

அப்படிதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனுமந்தபுரம் ஏரி பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இரும்பு கடையில் ஒரு குண்டு வெடித்து இருவர் பலியானார்கள். என கூறப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் பயிற்சி எடுத்தது போக, மீதி குண்டுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்களாம். அந்த குண்டுகள் தான் தற்போது கிடைக்கின்றன என தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அப்புறப்படுத்தாமல் வெடிகுண்டுகள் இருப்பதால் அப்பகுதி மக்கள் ஏரிக்கரையோரம் கால்நடைகளை மேய்க்கவும், அந்த பகுதிக்கு செல்லவும் தயக்கம் காட்டுகின்றனர் என கூறப்படுகிறது,

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

36 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

3 hours ago

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…

5 hours ago