புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி என்று பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.இதனிடையே தான் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று பதிவிட்டார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி ! மொழி திணிப்பு எந்த மாநிலத்திலும் இருக்காது என்று தாங்கள் தெளிவுபடுத்தியதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் .பாரதியின் பார்வையில் எம் கம்பனையும், வள்ளுவனையும், இளங்கோவையும், நம் முன்னோர்களையும், அறிவியல், கலை மற்றும் ஆன்மீக சாதனைகளையும் மறைத்தொழித்த கல்விக்கு முடிவு கட்டி, தமிழன் கட்டாயம் தமிழ் படிக்கும் நிலையை ஏற்படுத்தியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…