தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்ட பிரதமர் மோடி – பொன் ராதாகிருஷ்ணன்

Published by
லீனா

தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்டிருக்கும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.

சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மழைப்பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டிருந்தார். 

இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்டிருக்கும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து பெய்யும் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு வரும் தமிழகத்திற்கு வேண்டிய உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

இதனிடையே பாஜக தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்களின் வழிகாட்டலில், தமிழக தலைவர் அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி பாஜகவின் தாமரைச் சொந்தங்களும் களத்தில் மக்களுக்கு உதவிடத் தயாராக உள்ளனர். தமிழக மக்கள் இந்த பெருமழையிலிருந்து பாதிப்பில்லாமல் மீண்டிட எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Recent Posts

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!

மும்பை :  இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…

15 minutes ago

போரில் இறங்கிய அமெரிக்கா! “பெரும் அழிவு காத்திருக்கு”…ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…

35 minutes ago

போரில் இறங்கிய அமெரிக்கா “ஈரான் மீது தாக்குதல்”! மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…

1 hour ago

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

17 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

18 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

18 hours ago