தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்ட பிரதமர் மோடி – பொன் ராதாகிருஷ்ணன்

Published by
லீனா

தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்டிருக்கும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி.

சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மழைப்பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டிருந்தார். 

இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தின் மீது எப்போதும் தனித்த அன்பும், பாசமும், நேசமும் , அக்கறையும் கொண்டிருக்கும் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து பெய்யும் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு வரும் தமிழகத்திற்கு வேண்டிய உதவிகள் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

இதனிடையே பாஜக தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்களின் வழிகாட்டலில், தமிழக தலைவர் அன்பு சகோதரர் திரு.அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி பாஜகவின் தாமரைச் சொந்தங்களும் களத்தில் மக்களுக்கு உதவிடத் தயாராக உள்ளனர். தமிழக மக்கள் இந்த பெருமழையிலிருந்து பாதிப்பில்லாமல் மீண்டிட எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

13 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

14 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

15 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

16 hours ago