சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் விமானப்படை விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டது.
நேற்று நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து, வெலிங்டனில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரபப்பட்டது.
சூலுார் விமானப்படை தளத்திலும் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பின்பு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டுச்செல்லப்பட்டது. 13 பேரின் உடல்கள் இன்று மாலை டெல்லி சென்றடையும் என கூறப்படுகிறது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 சிறப்பு விமானங்கள் டெல்லி செல்கிறது. ஒரு விமானத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும், மற்றோரு விமானத்தில் நேற்று விபத்து நடந்ததிலிருந்து டெல்லியிலிருந்து முப்படையின் உயரதிகாரிகளும் குன்னூர் வந்ததனர். அவர்களும் திரும்பி டெல்லிக்கு செல்வதற்கு ஏதுவாக மற்றோரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…
அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…