தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

Published by
Edison

நவம்பர் 4 ஆம் தேதியன்று அனைத்து இறைச்சிக் கடைகள் இயங்க,இறைச்சி விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்து இறைச்சி கடைகளும் இயங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. இதே போல் ஆடு/மாடு, கோழி இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு உத்தரவின்படி கண்டிப்பாக 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று முழுவதும் அனைத்து, இறைச்சிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.அரசு உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர். துப்புரவு அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்க மண்டல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

41 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

15 hours ago