[file image]
தமிழ்நாடு பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்ததாக அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.
2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்ட பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக திமுக தலைவர் முக ஸ்டாலின், எம்எல்ஏக்கள் மீதான வழக்கை தொடர விரும்பவில்லை என பேரவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை தொடர விரும்பவில்லை என சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை செயலாளர் விளக்கத்தை ஏற்று மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பேரவை செயலாளர், உரிமைக்குழு தரப்பில் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
உரிமைக்குழு நோட்டீஸுக்கு தடை விதித்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து 2021-ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த மனுவை ஏற்று அதை ரத்து செய்தது ஐகோர்ட். இதனை எதிர்த்து, பேரவை செயலாளர், உரிமைக்குழு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் பேரவை செயலாளர் தரப்பு அறிவித்தது. இதனால் வழக்கு தள்ளுபடியானது.
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…