[Image Source : Twitter/@Udhaystalin]
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கிராமப்புற, ஏழை விளையாட்டு வீரர்களின் திறமைக்கு களம் அமைத்து கொடுக்கிறது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு.
கிராமப்புற – ஏழை – எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 27000 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளன. எனவே, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள். போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள் – விளையாட்டு ஆர்வலர்களை அழைக்கின்றோம் என்றுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…