[Image Source : Twitter/@Udhaystalin]
மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்.
ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ஜூலை 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கிராமப்புற, ஏழை விளையாட்டு வீரர்களின் திறமைக்கு களம் அமைத்து கொடுக்கிறது முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு.
கிராமப்புற – ஏழை – எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 27000 வீரர் – வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளன. எனவே, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர் – வீராங்கனையருக்கு வாழ்த்துகள். போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள் – விளையாட்டு ஆர்வலர்களை அழைக்கின்றோம் என்றுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…