நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published by
Venu

நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் கைதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ்  கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, ஜெயக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன்பேசுகையில்,  நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது .வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர் பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலை ஏற்பட்டுள்ளது பொருளாதாரம் வீழ்ச்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் கைதை  தொடர்ந்து ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மீது பாஜகவினர் வழக்கு போட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் பிரச்சனை பாஜக வெற்றிகரமாக சாதித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள் ஆனால் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை விளைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பிரதமர் மோடி நீதித்துறையை ராணுவம் காவல்துறை அவர் கையில் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறா.ர் சட்டத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும் .நீதித்துறை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை .நீதித்துறை பிஜேபி அடிமையாக செயல்பட்டு வருவது போல் தெரிகிறது என்று  ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

Published by
Venu

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

12 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

58 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago