நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published by
Venu

நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் கைதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ்  கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, ஜெயக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன்பேசுகையில்,  நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது .வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர் பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலை ஏற்பட்டுள்ளது பொருளாதாரம் வீழ்ச்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் கைதை  தொடர்ந்து ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மீது பாஜகவினர் வழக்கு போட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் பிரச்சனை பாஜக வெற்றிகரமாக சாதித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள் ஆனால் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை விளைவு ஏற்படும் அபாயம் உள்ளது.

பிரதமர் மோடி நீதித்துறையை ராணுவம் காவல்துறை அவர் கையில் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறா.ர் சட்டத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும் .நீதித்துறை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை .நீதித்துறை பிஜேபி அடிமையாக செயல்பட்டு வருவது போல் தெரிகிறது என்று  ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

Published by
Venu

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago