பழனி கோவிலுக்குள் கருவறை புகைப்படம்… அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் (முருகன் கோவில்) கருவறை வரை ஒருவர் சென்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்குள் செல்போன் , கேமிரா போன்ற சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை இருந்தும் எப்படி கருவறை வரை சென்று புகைப்படம் எடுத்தனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் சார்பில் பதில் கூறுகையில், கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் செல்போன் , கேமிரா பயன்படுத்த தடை என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், பாதுகாப்பு சோதனையும் 24 மணி நேரமும் நடைபெறுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்து, வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் கோவில்களில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் தரவேண்டும் என்றும், கருவறை வரை ஒருவரை அனுமதித்து புகைப்படம் எடுக்க காரணமாக இருந்த கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

53 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago