தினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த இவர் மோகன். 32 வயதுடைய இவர் விழுப்புரத்தில் உள்ள கிளியனூர் காவல்நிலையத்தில் முதல்நிலை போலீஸாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து 20கி.மீ தொலைவில் இருக்கும் காவல்நிலையத்திற்கு தினமும் சைக்கிளில் பயணம் செய்து தான் செல்வாராம். ஆம் மோகன் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் சைக்கிளில் 40கி.மீ பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது இடதுகால் முட்டியில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனையடுத்து அவரது உடல் தசைகளை சீராக்குவதற்காக சைக்கிள் ஓட்ட தொடங்கிய அவர் தற்போது தினமும் காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை சைக்கிளில் சென்று வருகிறார். இதனால் தனது உடல் நிலை சீராக இருப்பதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் மோகன் கூறியுள்ளார். மேலும் தினமும் சைக்கிளில் செல்லும் மோகனை அப்பகுதி மக்கள் சைக்கிள் போலீஸ் என்று அன்புடன் அழைப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…