தமிழகத்தில் இன்று முதல் டீ கடைகள் செயல்பட அனுமதி!

Published by
Rebekal
  • தமிழகத்தில் வருகிற 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி இன்று முதல் தமிழகத்தில் டீக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில தளர்வுகள் உடன் தமிழகத்தில் அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் இந்த ஊரடங்கை ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளில்  டீ கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் தேநீர் கடைகளை திறப்பதற்காக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் நாளை முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் தேனீர் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தேனீர் வாங்க வரும் பொழுது மக்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களை கொண்டுவந்து பெற்று செல்லுமாறும், தேனீரை பிளாஸ்டிக் பை பார்சல்களில் வாங்குவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனீர் கடைகளில் அருகே நின்று தேனீர் அருந்துவதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

Published by
Rebekal

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

31 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

1 hour ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

1 hour ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago