திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் neet-ஐ தமிழகத்துக்குள் நுழைத்த தமிழக முதல்வர் பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார். என தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாள்கள் மட்டுமே கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா..? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்; முதலீட்டாளர் மாநாடுகள்- முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஈர்த்தம் முதலீடு எவ்வளவு..? உருவான வேலைவாய்ப்புகள் குறித்து விவாதிக்கவில்லை.
“ஜல்ஜீவன் மிஷன்” திட்ட முறைகேடுகள், ஊராட்சி மன்றங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்காதது, மத்திய அரசு மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி, மாநில அரசின் கடன் சுமை 4.56 லட்சம் கோடி எதையும் விவாதிக்கவில்லை. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்தது, டெல்லி எஜமானர்களின் உத்தரவின்படி கையெழுத்து இட்டதாலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைத்தது பழனிச்சாமி அரசு ஆனால் இவற்றை மறைத்து சட்டப்பேரவையில் ஆவேசம் காட்டுகிறார் முதலமைச்சர்.
டெல்டா பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2013 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியிருக்கிறது. விவசாயி வேடம் போடும் முதல்வர் வாய்திறக்கவில்லை.
அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம் வேளாண் உற்பத்தி, ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்த சட்டம் ஆகியன விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரானது என போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் பாராட்டி ஆதரிக்கிறது பழனிச்சாமி அரசு, முதுநிலை (சீனியாரிட்டி) அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்காதது, அவர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்கவில்லை.
ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக் கத்தி சுழற்றும் நாடகம் அதிக காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும்.. ஆறு மாதத்தில் விடியும் என தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…