ponmudi [Imagesource : Representative]
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் அவர்கள், ஆளுநராக செயல்படவில்லை, அவர் பிரதமரின் பிரதிநிதியாக செயல்படுகிறார்.
வெறும் 2-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க வேண்டும் என தமிழக மக்களின் தரப்பில் நான் வலியுறுத்துகிறேன். இது ஒரு கூட்டாட்சி நாடு, இதனை ஒற்றை ஆட்சியாக பார்ப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
பாஜக ஒரே நாடு, ஒரே அரசு என்ற தலைப்பிலே செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களுக்குரிய உரிமைகள் பறிக்கப்படுகிறது. அரசின் முக்கியமான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான கருத்து மற்றும் மற்றும் நிர்வாக மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை தாமதப்படுத்தி வருகிறார் என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…