Pen statue and Supreme Court [File Image]
மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஜூலை 3ஆம் தேதி துவங்க உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து அண்மையில் பெற்றது.
இந்நிலையியல் இந்த பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு குறித்த மனுவில், பொதுமக்களிடம் முறையாக அறிவிக்காமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், மீனவர்கள் கருத்தை கேட்காமல் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கடலுக்குள் பேனா சிலை வைப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது என்றும், இயற்கைக்கு முரணானது என்றும் மீனவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் பேனா நினைவு சின்னம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…