நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் தாக்கம் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கடலூருக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 250 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.மணிக்கு 11 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து அதிதீவிர புயலாக வலுப்பெற்று ,வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்கக்கூடும்.தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகு , கடலோர மாவட்டங்களில் அதனுடைய வலுவானது 6 மணி நேரத்திற்கு தொடரும்.அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்கும். நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும். இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…