M.P venkatesan Neet [Representative Image]
மதுரையில் சுமார் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஜூலை 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நூலகம் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை கலைஞர் நூலகம் குறித்து அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், “மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை”என்று திரு. உதயகுமார் சொல்கிறார். புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள். அதிமுகவினர் வீட்டில் மட்டும் இல்லையா உதயகுமார் அவர்களே! நூலகம் அறிவுக்கோயில்! அதன் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…