இந்தியா

கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்ட விவகாரம் – திருச்சி சிவா கண்டனம்!

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கண்டனம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர்  பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் இரு அவைகளிலும் முடங்கி வருகிறது. இன்று 5-ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக 2 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்பொழுது அவரது மைக் அணைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த செயல் எனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கிறேன் என இன்று மாநிலங்களவையில் கார்கே கண்டனம் தெரிவித்தார்.

இதுபோன்று, கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் கலவரம் கொடூரம் குறித்து, நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும்போது பைக் அணைக்கப்பட்டது. மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை மாநிலங்களவையில் எப்போதும் நடந்ததில்லை. ஏன் பைக் அணைக்கப்பட்டது?, யார் உத்தரவின் பேரில் இது நடந்தது? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுவதாகவும், திமுக எம்பி திருச்சி சிவா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாருடைய மைக்கும் அணைக்கப்படவில்லை என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்த நிலையில், மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க, மாநிலங்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago