கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் இரண்டு நாட்களாக வெறிநாய் ஒன்று சுற்றித் திரிந்து வந்து உள்ளது.இந்த நாய் சாலையில் தனியாக செல்லுபவர்களை துரத்தி கடித்துக் குதறுகிறது.
அந்த வெறி நாய் கடித்ததில் சிறுவர் முதல் பெரியவர் வரை 25-க்கும் மேற்பட்டோர் கார்மாங்குடி அரசு ஆரம்ப நிலையம் மற்றும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இதில் ஆறுமுகம் என்ற முதியவர் விருத்தாசலம் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நாய் கால்நடைகளையும் விட்டுவைக்காமல் கடித்து காயப்படுத்துவதால் , கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாமல் கிராம மக்கள் வீட்டிலேயே கட்டிவைத்து உள்ளதாக விவசாயிகள்தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் , மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் , விவசாயத் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் நாயிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள கைத்தடியுடன் செல்கின்றன. அந்த நாயை உடனே பிடிக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…