Completion of candidature review [image source:x/@thatsTamil]
Election2024 : தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு மீதான பரிசீலனை நிறைவு பெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதன்படி, தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு மீதான பரிசீலினை நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, சேலத்தில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 27 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
கோவை தொகுதியில் 59 பேர் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 41 மனுக்கள் ஏற்கப்பட்டது, 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தேனி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் 35 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் 6 பன்னீர்செல்வம் உட்பட 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 28 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தகுதியுள்ள வேட்புமனுக்களை ஏற்கப்பட்டு, சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேசமயம் சில இடங்களில் வேட்மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே, வேட்புமனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…
சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…
சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…