Boat Arrest [Image -DTnext ]
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நேற்று ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு சுமார் 600 விசைப்படகுகளுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். நேற்று நள்ளிரவு அனைவரும் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது, அந்தோணிசாமி என்பவருடைய படகு நெடுந்தீவு அருகே பழுதாக நின்றதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அந்த படகையும் படகில் இருந்த ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ளனர். படகு உரிமையாளர் அந்தோணிசாமி ராமேஸ்வரம் கடற்படை அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். தனது படகு இலங்கையில் அருகே பழுதாகி நின்றதாகவும் அதனை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதாகவும் புகார் அளித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்ட 9 மீனவர்களிடம் நெடுந்தீவில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…