தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெளிமாநிலத்திலிருந்து வந்து இங்கு கடைகள் வைத்து, தொழில் புரியும் பலரும் இருக்கின்றனர். அந்த நிலையில் வட மாநிலத்தவர்கள் அவர்களது கடைகளை பூட்டி சென்ற பிறகு, இரவோடு இரவாக சில நபர்கள் பூட்டுக்கு மேல் பூட்டுப் போட்டு ,அதில் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், தஞ்சையில் டைல்ஸ், இரும்பு பொருட்கள், பலகாரங்கள் உள்ளிட்ட கடைகளை நடத்தி வரும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு கடைகளை பூட்டிச் சென்ற நிலையில், அடுத்த நாள் காலையில் கடைக் கதவுகளில் கூடுதல் பூட்டுகள் பூட்டப்பட்டிருந்ததுடன், தமிழ் தேசியக் கட்சி பெயரில் வட மாநிலத்தவருக்கு எதிரான எச்சரிக்கை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. வழக்கம் போல் காலையில் கடைகளை திறக்கச் வந்த வடமாநிலத்தினர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதேபோன்று புதுக்கோட்டையில் வடமாநிலத்தவர்களின் எலக்ட்ரிக்கல் கடை, டிரேடர்ஸ் உள்ளிட்டவற்றில் இரவோடு இரவாக மேல் பூட்டு போடப்பட்டு, அவர்களுக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் வடமாநிலத்தினர் தற்போது வரை கடைகளை திறக்கவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…